காலைல எழுந்து பல் தேய்க்கிறாலோ இல்லையோ ! டிவி பாக்க உக்காந்திருவா.எல்லாம் என் சுவர்ணா தான்…அவளை டிவி பெட்டியிடம் இருந்து பிரிச்சு இழுத்துட்டு வந்து சாப்பிட வைக்கிரதுக்குள்ள எனக்கு பைத்தியமே பிடிச்சுடும்..( அதான் ஏற்கனவே பிடிச்சிருச்சே ).
ஒருவழியா இழுத்து உக்கரா வச்சு சாப்பிட தந்தா…அம்மா கதை சொல்லு நு சொன்னா…
நானும் ஒரு ஊருல ஒரு காக்கான்னு ஆரம்பிச்சேன் ( எல்லாம் நம்ம காக்கா வடை கதைதான் வடையே ஊசிபோனாலும் நாம் கதைய மாத்தறதா இல்லேல !! ) அவ உடனே “ அம்மா எப்போ பாத்தாலும் காக்கா வட துக்கி கிட்டு போச்சுன்னு சொல்றே..போர் மா நி…காக்காக்கு வேற எதுமே பண்ண மாட்டாளா பாட்டின்னு கேட்டா..எப்போவுமே வடை மட்டுமே பண்ண கூடாது..தோசை இட்லி பூரி லாம் பண்ணனும் “ (அவ்வ்வ்வ்வ்வ் தேவையா எனக்கு ??? )
எனக்கு இதான் தெரியும் நீ வேணும்னா ஐடியா தா நான் கதை சொல்றேன்னுஅவகிட்டயே மாட்டி விட்டேன் ( இப்போ என்ன செய்வே ஹை ஹை ) அவ துவங்கினா ..ஒரு ஊருல ஒரு காண்டாமிருகம் இருந்துச்சாம்..காண்டாமிருகம்னா இங்க்ளிஷ்ல Hippopotamus அதுக்கு பேபி சோப்பு போட்டு குளிக்கனுமுன்னு ஆசையாம் அப்போ அங்கே காட்ல கடைலாம் இல்லையாம் அப்போ ஒரு மங்கி வந்துச்சாம்…சரி மீதி நீ சொல்லுமா ன்னு போட்ட ஒரு போடு “ என்னத்த சொல்றது..
வாய்ல தண்ணி வத்தி மூளைல ஐடியாவும் வத்தி நொந்து நூடுல்ஸ் ஆனப் பிறகுதான் போனா அவ,... வர வர குழந்தை பண்ற அட்டகாசம் தாங்க முடியலப்பா..ஒரு வகையில நல்லாத்தான் இருக்கு இதுவும்…
எல்லோரும் தொடர்பதிவுன்னு என்னனமோ சொல்றாங்க..இப்போ நான் சொல்றேன்..இதான் கதைக்கு லீட்..
“ ஒரு காட்டுல ஒரு காண்டாமிருகம்..அதுக்கு ரொம்ப நாளா பேபி சோப்பு போட்டு குளிக்கனுமுன்னு ஆசையாம்..ஆனால் காட்டுல கடையே இல்லையாம்..அங்கே ஒரு மங்கி வந்துச்சாம்……………”
இக்கதையை தொடர
சந்தியாமாமி , எல் கே , அப்பாவி தங்கமணி , அருன்ப்ரசாத் , சித்ரா , ஆனந்தி , சௌந்தர் , TERROR-PANDIYAN , ஆதவன் ஆகிய நல்ல உள்ளங்களை அழைக்கிறேன்..
52 comments:
ஏன் ஏன் ? நல்லாதான போயிட்டு இருந்துச்சி ?? எதுக்கு இப்படி >>
பிழைகளை குறைக்கவும் .. எதோ நானும் முயற்சி பண்றேன்
Akka unga swarna paravalapola.....unga kitta manttumthan kathai ketta .....neenga oorelam ketkureenga athun vida vida ma....yammadi..avvvvvvvvvvvvvvvvvvvv.....
@LK
என்ன இது தமிழுக்கு வந்த சோதனை....எப்போதான் தமிழ ஒழுங்கா எழுதப்ப்போறேனோ...நன்றி அண்ட் சாரி
@sukanya எல்லாம் அவளுக்கு சொல்ல உதவிய இருக்குமே அதான்...எப்புடி..
நன்றி
ஏன் இந்த கொலை வெறி நான் என்ன தப்பு பண்ணேன் ஏன் என்கிந்த தண்டனை ? ...ஒ மை கோட் ..சரி மாட்டியாச்சு எழுதறேன் கொஞ்சம் டைம் கொடு ப்ளீஸ்..அப்பாவி தங்கமணியும் சுசியும் அழைப்பு விட்டது இது வரை எழுதலை ..கடவுளே காப்பாத்து ...
//வர வர குழந்தை பண்ற அட்டகாசம் தாங்க முடியலப்பா..ஒரு வகையில நல்லாத்தான் இருக்கு இதுவும்…///
same blood...:)
@sandhya கொலை வெறிலாம் இல்ல சும்மா ஒரு மாற்றத்துக்காக..
@Jey
yes yes same blood thaan ha ha ha nandri
அது எல்லாம் சரி Hippopotamus என்றால் நீர்யானை..
காண்டாமிருகம் கிடையாது.... ஆமா யார் அந்த சௌந்தர்......ஹி ஹி ஹி
@சௌந்தர் அப்பா சொன்னது குட்டி பொண்ணுப்பா...ஹி ஹி நன்றி
அட இத அந்த சின்ன பொண்ணுக்கு தான்...
ஆஹா, இப்படியே எல்லோரும் மாட்டிவிட்டா நாம சொந்த பதிவே போட தேவை இல்லை. இப்படியே ஓட்டிடலாம்.
ரைட்டு! இருங்க ரூம் போட்டு யோசிச்சிட்டு வரேன்
// ஒரு காட்டுல ஒரு காண்டாமிருகம்..அதுக்கு ரொம்ப நாளா பேபி சோப்பு போட்டு குளிக்கனுமுன்னு ஆசையாம்..ஆனால் காட்டுல கடையே இல்லையாம்..அங்கே ஒரு மங்கி வந்துச்சாம்……………”//
*****
காயத்ரி....
நீங்க சொல்ற இந்த கதை பட்டையை கிளப்புகிறது.
யாராவது பார்த்துட்டு 4 லாங்குவேஜ்ல 70mm ல படம் எடுத்துட போறாங்க....
mm ....good...nadakkattum...
ஆவ்வ்வ்வ்வ் தொடர்கதையா :)) இதே போல நானும் குட்டீஸூக்கு கதை சொல்லி இருக்கேன் தெரியுமா?
http://nanaadhavan.blogspot.com/2009/06/blog-post_22.html
மன்னிச்சிடுங்க... இப்போ நான் உண்மை சொல்ல வேண்டிய நேரம் வந்தாச்சி... எனக்கு எழுத படிக்க தெரியாது.. எஸ்... அதுக்கு காரணம் எங்க விட்டுல கரண்ட் கிடையாது. நான் மெழுகுவத்தி வெளிச்சத்துல படிக்க ட்ரை பண்ணேன் but FAN காத்துல அது நின்னுபோச்சி. மனச தளர விடாம தெரு விளக்குல படிக்க முயற்சி பண்ணேன்... மரத்துல இருந்து வந்த காத்துல அது அனஞ்சி போச்சி. அதும் இல்லாம நான் ஒரு ஊமை so என்னால பாக்க முடியாது... இப்போ சொல்லுங்க நான் எப்படி இந்த கதைய முடிக்க முடியும்??
@சௌந்தர் ஹா ஹா
@அருண் பிரசாத் சும்மா ஒரு வெள்ளோட்டம் தான்...கவலை வேண்டாம்
@R.Gopi ஹி ஹி சரி copyrights வாங்கிடறேன்...தக்க சமயத்தில் சொன்னதால் உங்களுக்கும் பங்கு தரேன்
@Kousalya நன்றி தோழி..நீங்களும் எழுதலாமே..ப்ளீஸ் ட்ரை
@Sangkavi சும்மா...நன்றி
@TERROR-PANDIYAN(VAS) இந்த கருத்து எழுதினது மாதிரியே கம்ப்யூட்டர் முண்டி மெழுகு வாதி வச்சு அந்த வெளிச்சத்துல எழுதிடுங்க சிம்பிள் ல
"நல்லெண்ணெய்" சித்ரா...... ஜெயசித்ரா...... கவிக்குயில் சித்ரா ..... எல்லோரும் மேடைக்கு வரவும்.... உங்களை எல்லோரும் காயத்ரி மேடம் கூப்பிடுறாங்க...... நல்ல வேளை, நான் தப்பிச்சிட்டேன்..... காண்டா மிருகத்திடம் இருந்து தப்பிக்கிறதுனா சும்மாவா?
//எல்லோரும் தொடர்பதிவுன்னு என்னனமோ சொல்றாங்க..இப்போ நான் சொல்றேன்..இதான் கதைக்கு லீட்..
“ ஒரு காட்டுல ஒரு காண்டாமிருகம்..அதுக்கு ரொம்ப நாளா பேபி சோப்பு போட்டு குளிக்கனுமுன்னு ஆசையாம்..ஆனால் காட்டுல கடையே இல்லையாம்..அங்கே ஒரு மங்கி வந்துச்சாம்……………”
இக்கதையை தொடர
சந்தியாமாமி , எல் கே , அப்பாவி தங்கமணி , அருன்ப்ரசாத் , சித்ரா , ஆனந்தி , சௌந்தர் , TERROR-PANDIYAN , ஆதவன் ஆகிய நல்ல உள்ளங்களை அழைக்கிறேன்..///
ஹா ஹா ஹா.. ரொம்ப நல்லது... யு டூ.........
சரி பாப்பாவுக்காக... நா கதை ஆசிரியர் ஆக முடிவு பண்ணிட்டேன்..
இனி உங்க எல்லாரையும் யாராலையும் காப்பாத்த முடியாதே....!! :D :D
//மன்னிச்சிடுங்க... இப்போ நான் உண்மை சொல்ல வேண்டிய நேரம் வந்தாச்சி... எனக்கு எழுத படிக்க தெரியாது.. எஸ்... அதுக்கு காரணம் எங்க விட்டுல கரண்ட் கிடையாது. நான் மெழுகுவத்தி வெளிச்சத்துல படிக்க ட்ரை பண்ணேன் but FAN காத்துல அது நின்னுபோச்சி. மனச தளர விடாம தெரு விளக்குல படிக்க முயற்சி பண்ணேன்... மரத்துல இருந்து வந்த காத்துல அது அனஞ்சி போச்சி. அதும் இல்லாம நான் ஒரு ஊமை so என்னால பாக்க முடியாது... இப்போ சொல்லுங்க நான் எப்படி இந்த கதைய முடிக்க முடியும்??///
யோவ் டெரர் ரூம் போட்டு யோசிப்பீரோ? வெங்கட் கூட சேராதன்னா கேட்டாதான...நல்ல வேலை. நான் எஸ்கேப்பு/..
ரெண்டே வரி போதுமே.. தொடர்ந்து (முடிக்க) சொல்ல..
"மங்க்கி பின்னாடி ஒரு நரி வந்துச்சாம்.. அந்த நரியோட, 'கதை' சரியாம்"
ஓர்
"மங்க்கி பின்னாடி ஒரு சிங்கம் வந்துச்சாம்.. அதுக்குமேல சொன்னா 'கதை' அசிங்கமாம்..."
அதுசரி.. 'காண்டாமிருகத்துக்கு' உங்க ஊரு 'இங்கிலீஷுல' 'Hippopotamus' ?
எங்க (உலக) இங்கிலீஷுல "Rhinoceros"ன்னு சொல்லுவோம்..
:)
பாருங்க காயத்ரி !நீங்கள் அடுத்த பதிவு போட்டது கூட தெரியாமல் இன்னும் சென்ற பதிவுக்கு நான் பின்னூட்டம் போட்டு கொண்டு இருக்கிறேன் .
வழக்கம் போல சிரிப்பு தான் .சில பின்னோட்டங்கள் இன்னும் சிரிப்பை வரவழைத்தன. நன்றிபா.
@Chitraஆஹா இப்படிலாம் எஸ் ஆகா பாத்தா எப்புடி...நன்றி
@Ananthiமிக்க நன்றி தோழி...நானும் பாபாவும் எதிர்பார்த்துகிட்டே இருக்கோம்..
@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) அதுக்கும் மேல மெனக்கெட்டு யோசிக்கிறார்
@Madhavan நன்றி...அவளை பொறுத்த வரை அது ஹிப்போபோடமுஸ்..நீங்க சொன்னதா சொலிட்றேன்...
@வார்த்தை :) நன்றி
@priya.r ஹ ஹ நன்றி தோழி நீங்க அவ்ளோ சின்சியர்..ஆமாம் வர வர பின்னூட்டங்கள் மிக மிக நகைச்சுவையா இருக்கு..நன்றி தோழி..செகிரம கதை எழுதுங்க...கத்துக்கிட்டு இருக்கேன்
ரஜினி படங்களில் ஓபனிங் பாடல் என்பது ரஜினியும் ஸ்டைலும் போல பிரிக்க முடியாதது. எந்திரனில் மட்டும் இதற்கு விதிவிலக்காக முடியாதல்லவா?
எந்திரனிலும் இருக்கிறது ஒரு ஓபனிங் பாடல். ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி என வசீகரித்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம்தான் இந்த ஓபனிங் பாடலை பாடியிருக்கிறார். பாடலை எழுதியிருப்பவர், வைரமுத்து.
நான் கண்டது ஆறறிவு, நீ கண்டது ஈரறிவு, நான் கற்றது ஆறுமொழி நீ கற்றது நூறு மொழி... என்று டியூனுக்கு ஏற்ப ஒழுகிச் செல்கிறது பாடல் வரிகள்.
நாளை இந்தப் பாடலை ரசிகர்கள் காது குளிர கேட்டு மகிழலாம்.
உங்க கடையில வாங்கிப்போன பூரிக் கட்டை சீக்கிரம் உடைஞ்சிடுச்சே?
அடேயப்பா! உங்க கணவர் தலை அவ்வளவு ஸ்ட்ராங்கா!?
அப்போ இரும்புலத்தான் செய்யச் சொல்லணும்
NAN AVAN ILLAI said...
\\ரஜினி படங்களில் ஓபனிங் பாடல் என்பது ரஜினியும் ஸ்டைலும் போல பிரிக்க முடியாதது\\
டேய் யார்ட நீ? இங்க வந்து தலைவர் படத்துக்கு விளம்பரம் கொடுக்கற?? நல்ல இரு ராசா.....
பெண்ணின் தாய் : மாப்பிள்ளை பையன் நடத்தை எப்படி?
பெண்ணின் தந்தை : கொஞ்சம் விசாரிச்சிப் பாருங்களேன்..
தரகர் : நீங்க வேற.. நல்லப் பையன். ஜெயில் வார்டனே.. நன்னடத்தை சர்டிபிகேட் கொடுத்திருக்காருன்னா பாருங்க..
//தோசை இட்லி பூரி லாம் பண்ணனும்//
ஸ்வர்ணா பாப்பா... நீ ரெம்ப நல்ல பாப்பா... இட்லி எல்லாம் பண்ணனும்... கரெக்டா சொன்ன...
//சரி மீதி நீ சொல்லுமா ன்னு போட்ட ஒரு போடு//
ஹா ஹா ஹா...ஐ லைக் ஸ்வர்ணா குட்டி... தொடர் பதிவுக்கு கூப்பிடறதுக்கு இனிமே ஸ்வர்ணா கிட்ட ஐடியா கேக்கலாம் போல இருக்கே... ஹி ஹி ஹி
//இக்கதையை தொடர அப்பாவி தங்கமணி //
அடப்பாவி... அங்க தொட்டு இங்க தொட்டு கடசீல நான் தானா... ஏன் இந்த கொலை வெறி? ... ரெம்ப நல்ல பொண்ணு மாதிரி... தங்கமணி அக்கா வாழ்கனு ரெண்டு நாள் முன்னாடி சொன்னபவே நான் அலெர்ட் ஆகி இருக்கணும்... ஹும்....
இந்த அழைப்பை பாக்கறதுக்கு முன்னாடியே... உங்களை ஒரு தொடர் பதிவுக்கு சிக்க வெச்சுட்டு அதை சொல்ல தான் இங்க வந்தேன்... (வந்து பாத்தா ஆப்பு ரெடியா இருக்கு...ஹும்...)
அது என்னவா...? எல்லாம் பழைய அழைப்பு தான் அம்மணி... அப்பாவியின் ஆர்டர்ல அமைதிச்சாரல் அக்காவை ஒரு தொடர் எழுத சொன்னேன் இல்லையா...அவங்க ஏற்கனவே எழுதிட்டாங்களாம் இந்த கற்பனை தொடர் பதிவு... சோ நீங்க தானே ரெம்ப ஆசையா தொடர் பதிவு கேட்டீங்க... வாங்க அம்மணி வந்து எழுதுங்க...
இதான் உங்களுக்கு தொடர் அழைப்பு
http://appavithangamani.blogspot.com/2010/07/blog-post_30.html
//நீங்க ஒரு கொள்ளகூட்ட கும்பல்கிட்ட சிக்கிக்கறீங்க (ஏன் இந்த நல்ல எண்ணம்னெல்லாம் கேக்க கூடாது). உங்ககிட்ட ஆயுதம், செல்போன் எதுவும் இல்ல. நீங்க இருக்கற எடத்துல எந்த தகவல் தொடர்பு சாதனமும் இல்ல. கண்ணுக்கு எட்டின தூரம் வரை சுத்தியும் வெறும் காடு. காட்டோட எல்லை முழுக்க மின்சாரவேலி. உங்கள ஒரு இருட்டு ரூம்ல அடிச்சு வெச்சு இருக்காங்க...எப்படி தபிச்சு வருவீங்க....தலைப்பு "நானும் நாப்பது கொள்ளையர்களும்" //
@NAN AVAN ILLAI நி எவனில்லை ????? என்ன கொடுமை இது வலைபதிவு விளம்பர பதிவா போச்சே...சரி சரி ஒரு கோடி ரூவாவ பதிவர் முன்னேற்ற கழகத்திற்கு கொடுத்துட்டு போங்க
@அப்பாவி தங்கமணி ஹஈ ஹஈ சும்மா தான்...நன்றி அக்கா..
@அப்பாவி தங்கமணி ஆஹா நன்றி..மொக்க போடா நல்ல வழி.... முயற்சி செய்து பார்கிறேன்..
ஆஹா ! காயத்ரியின் அடுத்த பதிவுக்கு தலைப்பு அப்பாவி தங்கமணி மூலமா கிடைத்து இருக்கே !
வழக்கம் போல கலக்குங்க காயத்ரி !
பின் குறிப்பு : குவைத்தில் இருந்து கோடை விடுமுறைக்காக தமிழகம் வந்திருக்கும் எனது தோழி குந்தவை இடம் பேசி கொண்டு இருந்த போது உங்களை பற்றியும் பேச்சு வந்தது .உங்களின் பதிவுகளை பாராட்டிய அவர் உங்களுக்கு அவரின் வாழ்த்துக்களை தெரிய படுத்த சொன்னார் ;எனது வாழ்த்துகளும் கூட தான்.!
வாங்க......... வந்து ஏன்டா தொடர் பதிவுக்கு கூப்டோம் பீல் பண்ணுங்க....
சோப்பு கிடைத்த ரகசியம்
I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .
@priya.r மிக்க நன்றி தோழி..என்ன சொல்லுவதேன்றே தெரியவில்லை..மிக்க நன்றி..உங்கள் தோழியிடம் என் நன்றியை கூறுங்கள்..நன்றி ப்ரியா
@TERROR-PANDIYAN(VAS) என் அழைப்பை ஏற்று சூப்பரா ஒரு கதை போட்டு கலக்கிட்டிங்க..நன்றி..வாழ்த்துக்கள்
hey
hey
nanthan 50vathu comments potuerken so enakuthan 51 five star,dairly milk,kitkat ellam choclket vangi anupidnum sariya gayathri akka..
varata
tata byebye
schooluku neram aitu.
@siva
http://www.candysnob.com/archives/pictures/8.jpg idhu five star
http://virtualgiftonline.net/basket8.jpg ithanga dairymilk and other assorted chocolates...
nandri brother
அன்பு தோழி காயத்ரி..
உங்கள் தொடர் பதிவு அழைப்பை எழுதி விட்டேன்..!
நேரம் இருக்கும் போது பார்த்து கருத்து சொல்லுங்க.. :-)))
http://anbudanananthi.blogspot.com/2010/08/blog-post_11.html
Its really interesting...keep it up Gayathri..:)
Post a Comment