நம்ம வலைபதிவு உலகம் மட்டும் இல்லாம இந்த பூலோகம் , மேல்லோகம் , பாதாளலோகம், லெப்ட் லோகம் , ரைட் லோகம், இண்டு லோகம் இடுக்கு லோகம்னு..
எங்கே போனாலும் தீராதது நம்ம தங்க்ஸ் ரங்கஸ் காமெடி மட்டும் மாறவே மாறாது!!
சில விஷயங்கள் பெண்களால் மட்டுமே செய்ய முடியும்...சில விஷயங்கள் ஆண்களால்
மட்டுமே செய்ய முடியும்..
லேடீஸ் ஒன்லி :
1 ) ஷாப்பிங் செய்ய பெண்களுக்கும் ரொம்ப பிடிக்கும்..தேவை என்ற ஒன்று
முக்கியமே அல்ல..( தள்ளுபடி விற்பனை என்ற பலகயய்விட முக்கியமா உங்க
தேவை கோவை எல்லாம் ?? )
2 ) பெண்களுக்கு அழுவது மிகவும் பித்த ஒன்று , பக்கத்தில் யாரேனும் அழுவதை
கேட்க்க இருந்தால் மட்டும் ! ( தனியா அழுதா அழுகைக்கு என்ன மரியாதை ?? )
3 ) கண்ணா பின்னான்னு கேள்வி கேப்போம்! அதுவும் ரங்கஸ் பதில் சொல்ல முடியாமல் முழிக்கும் படியான கேள்விகளாய் பார்த்து ! ( அப்போ தானே எதோ தப்பு
செய்ததுபோல் ஒரு என்னத்தை தாங்க்ஸ் மனசுக்குள்ள உருவாக்க முடியும் )
4 ) கரப்பான் , பல்லி , எட்டுக்காலி என்று எது வந்தாலும் வீர தீர பராக்க்கிரம மனது
உடைய பெண்ணா இருந்தாலும்...பூச்சி அடிக்க அல்லது ஓட்ட ஆண் தான் வேணும் ( அப்போதானே ஐயோ அம்மா பூச்சி என்று துள்ளி குதித்து சீன் போட முடியும் ! )
5 ) எங்கே போனாலும் குறைந்தது ஒரு மூணு பெண்களாவது கூடித்தான் போவார்கள்..தனியே போவதென்பது பெண்களால் முடியாத ஒன்று ( கும்ப்ள போனாத்தானே கூடி நின்னு அரட்டை அடிக்க முடியும் !! )
6 ) நாலு நாள் விடுமுரைன்னா என்ன ஒரு வாரம் விடுமுரைன்னா என்ன ? குறைந்தது ஒரு இருபது இருபத்தி ஐந்து துநிகலாவது வேணும் அப்பொழுதுதான் தினமும் இருக்கும் மூடுக்கு ஏற்றாற்போல் உடை அணிய முடியும் ! ( எப்புடி )
7 ) அலங்காரம் - கண்டிப்பாக தேவை - ஷாப்பிங் செல்ல , தோட்டத்தில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற , குப்பைகொட்ட , சீரியல் பாக்க , ........
8) குளியல் அறையில் கண்டிப்பாக மூன்று ஷாம்பூ நான்கு கண்டிஷனர் , ஐந்து சோப்பு
என்று இருக்கும்,,இதனால் எப்பொழுதும் குளியலறை சென்ட்டு கடைப்போல் இருக்கும்
( ஆயிரத்தெட்டு வாசனைகளில் எது எவை என்று பிரித்து பார்க்கவா முடியும் )
9 ) பெண்களுக்கு சீரியாகள் திரைப்படங்கள் எல்லாம் மிக மிக பிடிக்கும், தான் வாழ்கையை அந்த சீரியலில் வரும் பெண்ணோடு ஒப்பிட்டு தன்னை திடபடுத்தி கொள்ள ( எல்லாம் --- நான் தனி ஆள் இல்ல - என்ற மனநிலைக்கு தன்னை பக்குவ படுத்திக்கொள்ளத்தான் ! )
10 ) பெண்கள் அனைவருக்கும் குறைந்தது ஐந்து கிலோ வாவது இடை கோரக்க வேண்டும் என்ற என்ன கண்டிப்பாக இருக்கு.. ( தமன்னா மாதிரி ஒல்லியா இருந்தாலும் மனசுக்குள்ள தன்னை பிந்துகோஷ் போலவே கற்பனை செய்துகொண்டு நோன்துபோவார்கள் )
சரி சரி தோழிகளே அடிக்க கல்லேடுக்காதீங்க ! ...அதே மாதிரி சகோதரர்களே ரொம்ப சந்தோஷம் வேண்டாம்...
ஜென்ஸ் ஒன்லி :
1 ) ஷப்பிங்கா...அலறி அடித்துக்கொண்டு ஓடுவார்கள்..அதனால்தான் இபோழுதெல்லாம்..கடைகளில் ஆண்களின் பிரிவு மாடியில் அதுவும் சின்னதாக
கட்டபட்டிருக்கும் ! நாளுமாடி கட்டினாலும் நாலுநிமிஷம் போதுமே ஒரு சட்டை வாங்க
துணி அழகுக்கு அல்ல தேவைக்கு எட்ன்பாது இவர்களின் வாதம் ( உனுக்கு மட்டும் பாது பாது வாங்குறியே எனக்கு ஒரே மாதிரி சட்டை தானா ? என்று அலறுவார்கள். .அனைத்தையும் வாங்கியது அவர்கள் தான் என்று மறந்து ! )
2 ) இவர்கள் மிகவும் சென்சிடிவ் ஆனவர்கள்!! ' வத்தி குச்சிய கொளுத்தி அது ஒருங்கா எரியலன்னாலும்..தீப்பெட்டி கம்பெனிக்கே சீல் வைக்கும் அளவிற்கு கோவம் வரும் !
3) செண்டிமெண்ட் சுண்டைக்காய் எலாம் இவர்களுக்கு இல்லை அனால் கிரிக்கெட்டில்
சச்சின் தோற்றுபோனால் ஆஹா நேத்து அந்த சட்டை போட்டுருந்தேன் அப்போ சதம் அடித்தான் இப்போ இந்த மஞ்ச சட்டைக்கும் சச்சினுக்கும் சரி இல்லையே என்று..மேட்ச் முடியும் வரை ஒரே சட்டையில் கிரிகெட் பார்க்க அமருவார்கள்
4 ) கரப்பான் , பல்லி , சீரியல் , ஷாப்பிங் , மாமியார் , பாஸ் என்று பல அலர்ஜிகள் இவர்களுக்கு உண்டு..ஆனா பாருங்க எதையும் வெளியில் காட்டிக்காம சிங்கமாட்டும்
கம்ப்ஹீரம நிப்பாங்க !
5 ) ஒரு வாரம் அல்லது பத்துநாள் விடுமுறை என்றால் கூட நாலு ஷர்ட் ரெண்டு பேன்ட் மட்டுமே எடுத்து செல்வார்கள் அதிலும் ரெண்டு சட்டை ஒரு பேன்ட் தொடாமல் அப்படியே வரும் !
6 ) கண்டிப்பா ஒரு அஞ்சு நிமிஷத்துல உனக்கு போன் பண்றேன் மா ! என்று கூறி செல்வார்கள்..ஆனா வீடு வந்து சேரும் வரை போன் வராது...அவங்க மறக்கலாம் இல்ல! , உங்க தொலைபேசி என்னை தொலைக்கவும் இல்லை ! தோனல சோ கூபட்ல அவ்ளோதான் !
7 ) அலங்காரம் தேவை இல்லை..." ஐயோ !! அவனும் என்னைமாதிரியே கருப்பு கோட் சூட் போட்டுருக்கானே ! " என்று ஒரு ஆணாவது அலறி நீங்கள் பார்திருபீர்களா ???
8 ) சோப்பு ?? ஷாம்பூ ?? இருந்துச்சா என்ன..நான் கவனிக்கலைம்மா...என்று கூறிக்கொண்டே செல்வார்கள் குளித்து முடித்து விட்டு...( நாங்கலாம் நேச்சுரலா இருக்கோம் ! )
9) வழியை தொலைத்து நாலு கிலோ மீட்டர் எச்ட்ரா போனாலும் பரவல்ல..வழிய கேக்கவோ , மேப்ப பார்க்கவோ மாட்டார்கள்..முட்டாளுக்கு ஒரே வழி , அறிவாளிக்கு ஆயிரம் வழி ! எப்புடி ?? என்பார்கள்
10 ) பெண்களை விட ஆண்களுக்கே குழந்தை குனி அதிகம்...மனைவி குழந்தையையே
கவித்துகொண்டிருந்தால் " ம்ஹும்ம் என்று சத்தமிட்டு " நானும் இருக்கேன் கொஞ்சம் கவினி " என்பது போல் ஏதேனும் செய்வார்கள் !
இதை படித்த சகோதிரர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் பகுதியில் உள்ள எதையும் மறுக்கவோ ஆண்கள் பகுதியில் உள்ள வற்றை ஏற்கவோ மாட்டார்கள் !!
இது பெண்களுக்கும் பொருந்தும் !!
டிஸ்கி : கண்மணிகளா இதெல்லாம் நான் ஈமெயில் ல வந்தவையை ஏன் தமிழ்ல மாற்றி , கொஞ்சம் கட்டிங் ஓட்டிங் லாம் பண்ணித்தான் போட்டுருக்கேன்..
யார்மனசையும் புண்படுத்தவோ , கீறவோ , கிள்ளவோ , அடிக்கவோ , திட்டவோ , ஒதைக்கவோ , குத்தவோ , சீவவோ , நசுக்கவோ நினைக்கவில்லை !!! சொல்லிபுட்டேன்!!
ஆமா ! சிரிசுபுட்டு சிந்திக்காம போங்க மக்களே !!